search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
    X

    கோப்புபடம்.

    அமராவதி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

    • அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.
    • தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் :

    தாளவாடி பகுதிைய சேர்ந்த லிங்கராஜ் மகன் மணிகண்டன் (வயது 24). இவர் கோவையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஒட்டன்சத்திரம் அப்பியம்பாளையம் சென்று விட்டு தாளவாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் வந்ததும் அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.

    பின்னர் மணிகண்டன் உள்பட 3 ேபர் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×