search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி
    X

    வரவேற்பு நிகழ்ச்சியின் காட்சி.

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி

    • ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தா
    • மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.6-

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9- ம் ஆண்டு சங்கமம் ,முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சிஏ.வி.பி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி கல்லூரி முதல்வர் டாக்டர் லீலாவதி வரவேற்று பேசினார்.

    கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மோட்டி வேசன் அகாடமி சி.இ.ஓ., முனைவர். ஜெகன் கலந்து கொண்டு மாணவர்கள் முயற்சியுடன் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துகளையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் ,மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும்.

    மாணவிகள் கல்லூரி காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும் என்றார். முடிவில் ஏ.வி.பி கல்லூரி ஆங்கிலத்துறை தலைவி மகாலட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×