என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை தில்லை நகர் அய்யப்பன் கோவிலில் 10-ந்தேதி சிறப்பு வழிபாடு
- இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை தில்லைநகரில் உள்ள ரத்னாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் ேகாவிலில் கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ அய்யப்பன் விளக்கு பூஜை நடைபெறுகிறது.வருகிற 10 ந்தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7:30 மணிக்கு வாழைமரம் கொண்டு உருவாக்கும் அம்பலத்தில் அய்யப்ப சாமி பிரதிஷ்டை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, அய்யப்பன் விளக்கு சப்பரம், விளக்கு சங்கல்பம் ,மாலை 5 மணிக்கு உடுமலை ருத்ரப்பா நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலியுடன் பாலை கொம்பு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஸ்ரீ அய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு, பால் கிண்டி எழுந்தருளல், திரிஉழிச்சல், அய்யப்பனும் வாபரும், வெட்டும் -தடவும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்