search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
    X

     இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.

    உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

    • பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    விவசாயிகள் சங்கத்தின் மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பி.என்.ஆர்.பாரிகணபதி தலைமையில் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ,மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகுல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×