search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

     மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் சோதனை நடைபெற்ற காட்சி

    பல்லடம் கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • பல்லடம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் திடீர் சோதனை நடைபெற்றது
    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது

    பல்லடம்

    பல்லடம் பகுதியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,தலைமையிலான போலீசார் பல்லடம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடுகபாளையத்தில் உள்ள குளிர்பான விற்பனை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக்கடையில் இருந்து 6 கிலோ 210 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதே போல் உடுமலை சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில் 160 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் 4 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் 3 கடைகளில் 10கிலோ 510 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று பல்லடம் பகுதியில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் அது பற்றி 94440 42322 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×