என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
- அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
- மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
பல்லடம்,ஆக.3-
பல்லடம் அருகே உள்ள பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மனைவி அனிதா (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story






