என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அருகே கோழிப்பண்ணைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரம்
    X

    கோப்பு படம்.

    தாராபுரம் அருகே கோழிப்பண்ணைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரம்

    • கோழிப்பண்ணை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளதால், ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாலுகா சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. சுகாதார கேடு ஏற்படுவதால் இந்த கோழிப்பண்ணை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: -சின்னக்காம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையால், குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. விவசாய நிலங்களில் நீர் மாசுபடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தபோது பண்ணைக்கு இனி கோழிகள் வராது என கலெக்டர் தெரிவித்தார். ஆனால் கடந்த 1ந்தேதி போலீசார் முன்னிலையில் 30 ஆயிரம் கோழிகள் வந்திறங்கியுள்ளன. கடந்த 3ந் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த வந்தோம். கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் எங்களிடம் பேச்சு நடத்தினார்.

    கோழிப்பண்ணை பகுதியில் விரைவில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளதால், ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம். நடவடிக்கை இல்லாவிடில் மீண்டும் போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×