search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே வனப்பகுதியில் பதுங்கி தெரு நாய்களை வேட்டையாடும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்
    X

    கோப்புபடம்.

    காங்கயம் அருகே வனப்பகுதியில் பதுங்கி தெரு நாய்களை வேட்டையாடும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கேயே பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர்-காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றது. இதையடுத்து ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்–பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 4 கூண்டுகளை தயார்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர், அதன்படி கூண்டுக்குள் மாட்டு இறைச்சி மற்றும் உயிருடன் நாயை பாதுகாப்பான முறையில் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கூண்டுக்கு அருகே கூட சிறுத்தை வரவில்லை.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கூண்டுகளில் வைக்கப்பட்ட இறைச்சிகளை சிறுத்தை வந்து சாப்பிடவில்லை. வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக சுற்றி வருகிறது. ஒருவேளை ஊதியூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான் கூட்டங்களை சாப்பிட்டு வரலாம். ஊதியூர் பகுதியில் தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தெருநாய்களை சிறுத்தை வேட்டையாடி வரலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன் காரணமாக கூண–டுகளில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை சாப்பிட சிறுத்தை வராமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×