search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் சுவரில் மோதிய அரசு பஸ்
    X

    பஸ் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதிய காட்சி. 

    வீட்டின் சுவரில் மோதிய அரசு பஸ்

    • பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார்.

    அவினாசி :

    ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை சுப்பிரமணியம் (வயது 49) ஓட்டி சென்றார்.ரவிச்சந்திரன்(55) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் பஸ் நேற்று இரவு 9.45 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார். எனவே அவர்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பஸ்சை திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக பஸ் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதனால் வீட்டின் சுவர் இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதில் பஸ்டிரைவர், ஒட்டுனர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (40) ஆகிய மூவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×