search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தை ஏற்படுத்தி  நடுரோட்டில் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிய டிரைவர்
    X

    கோப்பு படம்.

    விபத்தை ஏற்படுத்தி நடுரோட்டில் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிய டிரைவர்

    • திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
    • டிரைவர் லாரியை நடு ரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவண பிரபு. இவர் 2 வருடங்களுக்கு மேலாக திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் லட்சுமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு லாரியானது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வலது கை உட்பட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்தவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடு ரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லாரியை வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×