20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் ,
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள்.
Published on

திருப்பூர் :

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களு க்கான ஊதிய முரண்பாடு களை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் , மத்திய அரசு அறிவித்த அகவிலை ப்படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியிலிருந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமை ப்பினர் உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷ ங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com