search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் வரத்து குறைவால் விலை உயர்வு
    X

    கோப்புபடம்.

    மீன் வரத்து குறைவால் விலை உயர்வு

    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • 10 டன் மீன்கள் மட்டுமே வந்தது.

    பல்லடம் :

    மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் மீன்கள் வரத்து குறைவால், மீன்களின் விலை உயர்ந்துள்ளதாக மீன் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் மீன் கடை உரிமையாளர் கனகசெல்வம் கூறியதாவது:- கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. டேம் மீன்கள் மட்டுமே சப்ளையாகி வருகிறது. வழக்கமாக பல்லடம் மீன் மார்க்கெட்டிற்கு 15 முதல் 20 டன் வரை மீன்கள் வரும். தற்போது 10டன் மீன்கள் மட்டுமே வந்தது. இதனாலும் மீன்கள் விலை உயர்ந்து உள்ளது. உதாரணமாக சென்ற வாரத்தில் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    250 ரூபாய்க்கு விற்ற இறால் மீன் 350 ரூபாய்க்கும், 260 ரூபாய்க்கு விற்ற நண்டு 360 ரூபாய்க்கும் விற்பனையானது. மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×