search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் கூட்டணி சார்பில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டத்தில் பங்கேற்றவரகளை படத்தில் காணலாம்.

    ஆசிரியர் கூட்டணி சார்பில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்

    • நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 18 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 4 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    பல்லடம் :

    தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு ஆசிரியர்களுக்கும், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கும் பாராட்டு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு பல்லடம் வட்டார தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.ஐ பெட்டோ அமைப்பின் அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், மாநிலத் தலைவர் நம்பிராஜ், பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் சந்திரசேகர், மாநில மகளிரணி செயலாளர் ரமாராணி, மாநில துணைத்தலைவர் கனகராஜ், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், தமிழ்வண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர் . இந்த கூட்டத்தில் டிட்டோ ஜேக் பேரமைப்பின் 18 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில அளவில், மாவட்ட தலைநகரங்களில் வருகிற 4 ந்தேதி( வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    Next Story
    ×