என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் வாகனம் மோதி முதியவர் சாவு
- மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62) . இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கரட்டுப்பாளையம்- மயில்ரங்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.
இதை கண்ட அந்த வழியாக சென்ற நபர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாரா? அல்லது ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்