search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் மோதி முதியவர் பலி
    X

    கோப்புபடம்.

    டிராக்டர் மோதி முதியவர் பலி

    • முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக்மோதியது.
    • வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி(வயது 71 )என்பவர் நேற்று காலை வெள்ளகோவில் நோக்கி செம்மாண்டம் பாளையம் மேடு என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப் போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக்மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கந்தசாமி சம்பவ இடத்தில் இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கே.ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கந்தசாமி வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மண்டல குழு உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×