என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
- மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளது.
- பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவரும், மாநில செய்தி தொடா்பாளருமான எஸ்.சுந்தரபாண்டியன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளுக்கு வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளதால் ஏழை, எளியோா் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.இது குறித்து பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.ஆகவே தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்வதுடன், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்