search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளை பார்க்க சென்றபோது ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
    X

    கோப்புபடம்.

    மகளை பார்க்க சென்றபோது ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

    • தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது.
    • திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், வஞ்சிபா ளையத்தை சேர்ந்தவர், மாணிக்கம் (58).இவர் கோவையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக, திருச்சி - பாலக்காடு டவுன் ரயிலில் ஏற, வஞ்சிபாளையம் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

    அப்போது தண்டவா ளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×