search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜயகாந்தின் 71-வது பிறந்தநாள்: திருப்பூரில் தே.மு.தி.க.வினர் நலத்திட்ட உதவிகள்- அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

    • திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    திருப்பூர்:

    தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் கட்சி கொடிகளை ஏற்றியும், ஏழை எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், பொருளாளர் காளியப்பன், அவைத்தலைவர் சரவணகுமார் ஆகியோருடன் துணை செயலாளர் ஏ .எஸ். அக்பர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தொடர்ந்து பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து பாண்டியன் நகரில் பகுதி செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் கொடியினை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் பொட்டு காளியப்பன், மாவட்ட பொருளாளர் ராயபுரம் பா. ஆனந்த், வெள்ளியங்கிரி, பிரபு, வசந்த், யுவராஜ், கிட்டுசாமி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும் விஜயகாந்தின் 71 -வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    Next Story
    ×