என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தாராபுரம், அலங்கியம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
- இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.
- கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாராபுரம், அலங்கியம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா அல்லது பணம் கையூட்டு பெறப்படுகிறதா அல்லது இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதுதவிர, நெல்கொள்முதல் நிலைய அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டத்தில், சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகளிடம் இருந்து கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
Next Story






