search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகிழக்கு பருவமழை - பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு
    X

    கோப்புபடம். 

    வடகிழக்கு பருவமழை - பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

    • மின் இணைப்புகளை மாணவர்கள் தொடாத வகையில் வகுப்பறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • பராமரிப்பு நிதி ஒதுக்கியிருப்பதால், இத்தொகை கொண்டு அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும்.

    தாராபுரம்:

    வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் இருந்து துவங்குகிறது. பள்ளிகளுக்கு முதற்கட்ட பராமரிப்பு நிதி ஒதுக்கியதால் மழை துவங்கும் முன்பே பராமரிப்பு வேலைகள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதோடு பயன்படுத்தாத, இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைத்தல், தொங்கும் நிலையில் மின் வயர்கள் இருந்தால் அப்புறப்படுத்துதல் அவசியம். மின் இணைப்புகளை மாணவர்கள் தொடாத வகையில் வகுப்பறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தண்ணீர் தேங்கும் வகையில், பள்ளங்கள் இருந்தால் அதை சமன் செய்வதோடு, பள்ளி வளாகத்திற்குள் கிணறு, ஆழ்துளை கிணறு போன்ற அமைப்புகள் இருந்தால், மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தினசரி சுத்தம் செய்வதோடு, குடிநீர் தொட்டி சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி கட்டடங்களின் அருகில் மரங்கள் இருந்தால், அதன் காய்ந்த இலைகள், குச்சிகள், மேற்கூரையில் இருக்கும் பட்சத்தில், மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதை அப்புறப்படுத்துவதோடு வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பராமரிப்பு நிதி ஒதுக்கியிருப்பதால், இத்தொகை கொண்டு அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும். தண்ணீர் தேங்காத வகையில் வளாகத்தை தூய்மைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×