search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொருளாதார மேம்பாடு கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புப்படம்

    பொருளாதார மேம்பாடு கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

    • ஆண்கள் குழுக்களுக்கும்15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
    • இரண்டு கறவை மாடு வாங்க தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மக்கள், பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் உதவிகளை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.ஆண்டு வருமானம் 3லட்சம் ரூபாய்க்கு மிகாத 18 முதல் 60 வயது வரையுள்ள நபர்களில், குடும்பத்தில் ஒருவர் மட்டும் பயன்பெறலாம்.

    பொதுகால கடன், தனிநபர் கடன் திட்டத்தில், அதிகபட்சமாக 15 லட்சம் வரையிலும் பெண்கள், 2 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.மகளிர் திட்ட அலுவலரால் தர ஆய்வு செய்த 6 மாதங்களுக்கு மேலாக இயங்கும் மகளிர் குழுக்களுக்கு 15 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.

    இதேபோல்ஆண்கள் குழுக்களுக்கும்15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.குழுவில் அதிகபட்சமாக 20 பேர் வரை இருக்கலாம்.

    இரண்டு கறவை மாடு வாங்க தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பித்தை பெற்றுபூர்த்தி செய்து கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்கலாம்.

    இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 0421 2999130 என்ற எண்களிலும்,dbcwotpr@gmail.comஎன்ற இணையதளத்திலும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×