என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
    X

     ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.  

    மங்கலத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

    • முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம், மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் மங்கலத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்காரியா சேட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தாஹாநசீர் , மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வே. முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினர். முடிவில் தெளபிக் நன்றி கூறினார். இந்த ஆம்புலன்ஸ் சேவையானது குறைந்த கட்டணத்தில் செயல்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×