search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை கோவில்களில் நவராத்திரி வழிபாடு
    X

    கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் கொலுவின் அழகிய காட்சி.

    உடுமலை கோவில்களில் நவராத்திரி வழிபாடு

    • கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்
    • உடுமலை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    உடுமலை

    கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்.இந்த விழாவானது புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வருகின்ற வளர்பிறை ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.

    விழாவின் முதல் மூன்று நாட்களும் வீரசக்தியின் தோற்றமான பார்வதி தேவியையும்,நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமி தேவியையும்,இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியையும்,10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியையும் வழிபாடு செய்யப்படுகிறது.

    பெண்களுக்கே உரித்தான இந்த பண்டிகை நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் ஆண்டுதோறும் தவறாமல் விரதம் இருந்து வீடுகளில் கொலு வைத்தும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும் வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு 23-ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.இதை முன்னிட்டு உடுமலை பகுதியில் உள்ள கோவில்களில் கொலு வைத்து நவராத்திரி விழா தொடங்கி உள்ளது.உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் முதல் நாளன்று அம்பாள் சைலபுத்திரிதேவி வடிவத்தில் ஆரஞ்சு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதே போன்று உடுமலை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    இதற்காக கோவில்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.ஒரு சில பொதுமக்கள் வீடுகளில் கொலு வைத்தும் நவராத்திரி விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×