என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதியவரை தாக்கிய தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பூவிழிராஜா புகைபிடித்துள்ளாா்.
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவிழிராஜாவை கைது செய்தனா்.
பல்லடம் :
தேனி மாவட்டம், அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் மதிசெல்வம் (60). கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் பூவிழிராஜா (34). இவா்கள் இருவரும் கேத்தனூா் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா்.கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பூவிழிராஜா புகைபிடித்து ள்ளாா். இதனைப் பாா்த்த மதிசெல்வம், இங்கு புகைபிடிக்கக்கூடாது, வெளியில் செல் என்று கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த பூவிழிராஜா அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மதிசெல்வத்தை தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவிழிராஜாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பல்லடம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் பூவிழி ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி தீா்ப்பளித்தாா். இதனைத் தொடா்ந்து பூவிழிராஜாவை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்