search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடங்கிபாளையம் பகுதி கல் குவாரிகளில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு
    X

    கோப்பு படம்.

    கோடங்கிபாளையம் பகுதி கல் குவாரிகளில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு

    • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.
    • விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன

    பல்லடம்

    பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.ஆய்வின்போது, குவாரிகளின் தற்போதைய நிலை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனரா, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமாா், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியம், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கனிம வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

    Next Story
    ×