search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2009ம் ஆண்டு காவல் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த போலீசார் சந்திப்பு விழா
    X

    போலீசார் சந்திப்பு விழா நடைபெற்ற காட்சி.

    2009ம் ஆண்டு காவல் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த போலீசார் சந்திப்பு விழா

    • 100க்கும் மேற்பட்ட போலீசார் சந்திப்பு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • போலீசார் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியாற்றும் 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் சந்திப்பு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட போலீசார் பாரம்பரிய உடைகள் அணிந்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்தும் பாட்டுகள் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் பயிற்சி பள்ளியில் தன்னுடன் பயிற்சி பெற்ற நண்பர்களுடன் குழு, குழுவாக "செல்பி"போட்டோ எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்வின் மூலம் எங்களது மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு ஏற்படுவதாக சந்திப்பில் பங்கேற்ற போலீசார் கூறினர்.

    Next Story
    ×