search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம்  ஜூஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
    X

    ஜூஸ் கடையில் ஆய்வு நடைபெற்ற காட்சி.

    பல்லடம் ஜூஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

    • மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், இளநீர்,ஜூஸ், மோர் குடித்து தாகம் தணிக்கின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தற்போது மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரி த்துள்ளது. இதன்படி பல்லடம் பகுதியிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், இளநீர்,ஜூஸ், மோர் போன்றவற்றை குடித்து தாகம் தணிக்கின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஜூஸ் கடைகளில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்வோர் உபயோகிக்கும் ஐஸ்கட்டிகள் தரமாக இருக்க வேண்டும். அதிக மான வண்ணங்களை குளிர்பா னத்தில் சேர்க்க க்கூடாது, குளிர்பா னம் தயாரிக்கும் இடம் சுத்த மாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். குளி ர்பான தயாரிப்பு பணியா ளர்கள் சுகாதா ரமான முறையில் இருக்க வேண்டும்.

    பழச்சாறு விற்பனை செய்பவர்கள் தரமான பழங்களை பயன்படுத்தி, அதற்கு தேவையான தண்ணீர், பால், போன்ற பொரு ட்களும் தரமாக இருக்க வேண்டும். பூச்சி, ஈக்கள் புகார் வண்ணம் தடுப்பு வசதிகள் செய்து இருக்க வேண்டும் என அறி வுறுத்தி னார்.

    Next Story
    ×