என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பாறு ஓடை முள்காட்டில் தீ விபத்து
    X

    கோப்புபடம்.

    உப்பாறு ஓடை முள்காட்டில் தீ விபத்து

    • அப்பகுதியில் புகைமூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
    • உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    உடுமலை :

    குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரத்தில் இருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையில் உப்பாறுஓடை உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    ஓடையில் முள் காடுகள் வளர்ந்துள்ளன. இதில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது .இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    Next Story
    ×