பொத்தியபாளையம் ஊராட்சியில் வேளாண்மை வளா்ச்சி பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளை ஆய்வு செய்தார்.மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

காங்கயம்:

காங்கயம் ஒன்றியம், பொத்தியபாளையம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் ஆய்வு செய்தாா்.

இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளையும், மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தாமணி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சதீஷ்குமாா், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com