search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • 3 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
    • தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான மூ. வீரபாண்டியன் மீது 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 4ந்தேதி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் , கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாநகர மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×