search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை
    X

     இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

    தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை

    • 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும்.
    • யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    இந்திர தனுஷ் திட்டம் விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1342 குழந்தைகள் மற்றும் 132 கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்று எதிர்வரும் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் இந்த விவரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய மருத்துவ துறையினருக்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

    High Risk எனப்படும் அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் புலம் ெபயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜெகதீஸ்குமார், உலக சுகாதார அமைப்பை சார்ந்த ஆஷா மற்றும் வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×