search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
    X

    மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற காட்சி. அருகில் மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர் உள்ளனர். அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கவுன்சிலர்களிடையே காரசார விவாதம் நடைபெற்ற காட்சி.

     

    மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்

    • ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும்.
    • நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கையாக பேசினர். அ.தி.மு.க. கவுன்சிலரும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க. ஊழல் செய்துள்ளது என்பதை ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும். இந்த குழு விசாரணைக்கு முழுமையாக அ.தி.மு.க. ஒத்துழைப்பு வழங்கும். பாதாள சாக்கடை மற்றும் நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும். இதுபோல் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் அமைக்க இட வசதி இல்லை. இதன் காரணமாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் ஒரு வரையறை செய்து எந்தெந்த பகுதியில் இடம் உள்ளது என்பது குறித்து தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே அந்த பகுதிகளில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    அதேபோல் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடி தார் சாலை அமைக்க வேண்டும்.மின் விளக்குகள் சரிவர எரியாததால் அதனை சரி செய்ய வேண்டும். அதேபோல் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடப்பதால் அதனை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் பேசியதாவது:- காண்டிராக்ட் எடுத்தவர்கள் எந்த வேலையையும் சரிவர செய்யாமல் அரைகுறையாக விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மட்டும் அதிகப்படியான வேலைகள் நடந்துள்ளது. ஆனால் வடக்கு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை தோண்டுவதற்கு குழி தோண்டும்போது அனைத்து வீடுகளில் குடிநீர் பைப்பையும் உடைத்து உள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் அதற்கு பதில் அளித்து பேசினார்.

    முன்னதாக கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரவி , கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒவ்வொரு கூட்டத்தின் போது ஸ்மார்ட் சிட்டி ஊழலையே கோரிக்கையாக வைத்து பேசுகின்றனர். என்ன ஊழல் நடந்தது என்று விசாரியுங்கள். அதற்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும். திரும்ப திரும்ப அதையே பேசி நேரத்தை வீண் அடிக்காதீர்கள். மக்களுக்கான பிரச்சினையை தீர்க்கும் வகையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றனர். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், கம்யூனிஸ்டு கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    Next Story
    ×