search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே ஆடு திருடிய வாலிபர் கைது
    X

     சந்துரு.

    உடுமலை அருகே ஆடு திருடிய வாலிபர் கைது

    • பூமி பாலன் என்பவர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார்.
    • தோட்டத்தில் கட்டியிருந்த ரூ.8000 மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை திருடி சென்று உள்ளார் .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டம் குடிமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கொங்கல் நகரம் பகுதியில் வசித்து வரும் பூமி பாலன் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார் .கடந்த 9-ந்தேதி மேற்கண்ட விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர் தோட்டத்தில் கட்டியிருந்த ரூ .8000 மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை திருடி சென்று உள்ளார் . பூமி பாலன் மற்றும் அவரது நண்பர் பின்னால் துரத்திச் சென்று பெதப்பம்பட்டி செஞ்சேரிமலை ரோட்டில் கறிக்கடை அருகில் வைத்து ஆட்டுக்குட்டியுடன் மர்மநபரை பிடித்தனர். அந்த நபரிடம் விசாரித்த போது சந்துரு என்பது தெரியவந்தது.

    அவரை குடிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர் . போலீசார் சந்துருவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×