search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை - பணம் அபகரித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை - பணம் அபகரித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது

    • வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர்.
    • அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) என்பவர் சந்திரன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும்,அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொ ண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து சந்திரன் கடந்த 12-ம் தேதி காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே பதுங்கியிருந்த 4 நபர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரை ப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

    பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர். மேலும் 6 பத்திர தாள்களில் சந்திரனின் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடம் இருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டுள்ளது.பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ள னர்.அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் வந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெருந்தொழுவு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து திருப்பூர் கல்லாங்காட்டை சேர்ந்த சுபாஷ் (32),அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30 ) மற்றும் திருப்பூர் புது பஸ் நிலையத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (33 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×