search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி மோசடி - விவசாயிகள் கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டம்
    X

     போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி மோசடி - விவசாயிகள் கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டம்

    • விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் டெபாசிட் செய்துள்ள பணம் சுமார் 3 கோடிக்கு கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி விவசாயிகள் போலீஸ் நிலையம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் திட்டம், அடமான கடன் மற்றும் விவசாயிகள் இருப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சுமார் 3 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக அதிகாரி களிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது கால்நடைகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது;- விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளின் பயிர் கடன், அடமான கடன், இருப்புத் தொகை, வாடிக்கையாளர்களின் டெபாசிட் ஆகியவற்றில் அ.தி.மு.க வை சேர்ந்த தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா ஆகியோர் பல கோடி குறைகேட்டில் ஈடுபட்டு ள்ளனர். விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார்.

    இதற்கு இடையே சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன், துணை பதிவாளர் கதிரவன் விவசாயிகளின் பணம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என கூறியதின் பேரில் விவசாயி கள் போராட்டத்தை தற்காலி கமாக கைவிட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் கருப்புசாமி, லோகு உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×