என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்திய 15 பேர் கைது
    X

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்திய 15 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
    • மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்குவாரி நிறுவனம் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். இதையடுத்து கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி கடந்த செப்.8ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இந்நிலையில் மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது எனவும், அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விசாரணையின்முழுவிபர நகலை கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாசில்தார் நந்தகோபால், கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றுவிட்டதால், துணை தாசில்தார் பானுமதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தரவு நகலை எங்களிடம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×