search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் 12 மையங்களில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள்- பேச்சுப்போட்டிகள்
    X

    நெல்லையில் 12 மையங்களில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள்- பேச்சுப்போட்டிகள்

    • நெல்லையில் மாணவ- மாணவிகளிடையே திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • இடைநிலை,மேல்நிலை,கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    நெல்லை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளிடையே திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடக்க இருக்கிறது. நெல்லையில் 12 மையங்களில் போட்டிகள் நடக்கிறது.

    வருகிற 13 -ந் தேதி டவுன் பாரதியார் தெருவிலுள்ள லிட்டில் பிளவர் மெட்ரி பள்ளியில் நடைபெறுகிறது. இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 -12 வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×