search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வாலிபர்களை கைது செய்ய வேண்டும்- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
    X

     நவீன மீன் விற்பனை கூடத்தை தகுதியுள்ள மீனவர்களுக்கு வழங்க கேட்டு மனு கொடுத்தவர்களை படத்தில் காணலாம்.

    குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வாலிபர்களை கைது செய்ய வேண்டும்- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

    • பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதியதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.
    • கொக்கிரகுளம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கற்களை வீசியும், அரிவாளால் தாக்குதலும் நடத்தினர்.

    நெல்லை,ஜூலை.31-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் தலைமையில் வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மீன் விற்பனை கூடம்

    பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதியதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. அதனை தகுதியுள்ள மீனவர்களுக்கு வழங்கிட வேண்டும். தகுதி இல்லாத நபருக்கு வழங்கியுள்ளனர். அதனை ரத்து செய்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

    இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டு வரும் நெல்லை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் எங்களுடைய மீனவர்கள் அடையாள அட்டை மற்றும் மீனவர்கள் நலவாரிய அட்டையை திரும்ப ஒப்ப டைப்பதை தவிர வேறு வழியில்லை.

    கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகிற 7-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் மீனவர் நல வாரிய அட்டையை ஒப்படைக்க உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கும்பல் தாக்குதல்

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுரேந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ் பாண்டியன், பாக்யராஜ், ராஜா, சுரேஷ் குடும்பனார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று முன்தினம் நள்ளிரவில் கொக்கிரகுளம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஸ்ரீவைகுண்டம், தாழையூத்து மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கற்களை வீசியும், கடைகளின் மீதும் அரிவாளால் தாக்குதலும் நடத்தினர்.

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவை ஒட்டி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை இழிவு படுத்தும் வகையிலும், சமுதாய தலைவர்களை இழிவு படுத்தும் வகையிலும் அவர்கள் செயல் பட்டுள்ளனர்.

    இந்த செயல்களுக்கான வீடியோ பதிவுகள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    Next Story
    ×