என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கி 5 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்கள்
    X

    பெண்ணை தாக்கி 5 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்கள்

    • வாலிபர்கள் தண்ணீர் தொட்டியை பழுது பார்க்க வந்து இருப்பதாக கூறினர்.
    • கதவை பூட்டி விட்டு வேலைக்கு செல்ல முயன்றார்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருக்குமரன் நகரை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி செல்வி (வயது 50). கூலித் தொழிலாளி. இவர் தனது 2 மகள்களுடன் 3-வது மாடியில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். பின்னர் வீட்டின் முன் பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீது செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வாலிபர்களிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர்கள் தண்ணீர் தொட்டியை பழுது பார்க்க வந்து இருப்பதாக கூறினர்.

    இதனையடுத்து செல்வி தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் செல்வியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இது குறித்து செல்வி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×