search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூச்சு திணறல் ஏற்பட்டு தொழிலாளி பலி
    X

    மூச்சு திணறல் ஏற்பட்டு தொழிலாளி பலி

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    பொள்ளாச்சி

    ஆனைமலை அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்நதவர் மாசிலாமணி (வயது 29). கூலித் ெதாழிலாளி. இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாசிலாமணி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த மாசிலாமணி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் மாசிலாமணி குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் மாசிலாமணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிேலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×