search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்

    • போலீஸ்காரர் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார்.
    • போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவத்திற்காக பெண்களும், குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான குழந்தைகளும் வந்து செல்கின்றனர்.

    கோவை சங்கனூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது 2-வது பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகன் 4 வயது சிறுவனும் வந்திருந்தான்.

    நேற்று மாலை அந்த சிறுவன் திடீரென மாயமானன். சிறுவனை அவரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர்.அப்போது மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசினார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட்டினான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீஸ்காரர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றார். போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×