search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் ஏட்டுவிடம் செல்போன் பறித்த 3 வழிப்பறி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
    X

    போலீஸ் ஏட்டுவிடம் செல்போன் பறித்த 3 வழிப்பறி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

    • இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்கு றிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி யாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து தலைமை காவலர் இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றார்.

    Next Story
    ×