search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
    X

    முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

    • மாணவிகள் மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    • கருணாநிதியின் எழுத்துக்களை படித்து மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற கலெக்டர் அறிவுரை

    சூலூர்,

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநி தியின் நூற்றாண்டு விழா வையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் என்னும் அலங்கார ஊா்தி தமிழகம் முழுவதும்

    கடந்த 4-ந் தேதி கன்னி யாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 -ந் தேதி சென்னையில் நிறைவடைகி றது. கருணாநிதி பயன்ப டுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, இன்று காலை கோவை மாவட்டம் சூலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அலங்கரி க்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளி ப்படுத்தினர்.

    இதையடுத்து ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னாள் முதல்-அ மைச்சர் கருணாநி தியின் எழுத்துக்களை மாணவர்கள் படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முத்தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செ ன்றனர்.

    இதைத்தொடர்ந்து முத்த மிழ் தேர் அலங்கார ஊர்தி கோவை கொடிசியா வளா கத்துக்கு வந்தது. அங்கும் தி.மு.க.வினர், அதிகாரிகள் மற்றும் மாணவ-மாண விகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×