search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பெண்களை பாதுகாக்கிற ஆட்சியாக விளங்கி வருகிறது - கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    கீழ ஈரால் கிராமத்தில் மகளிர் பணிக்கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்த காட்சி. அருகில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளார்.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பெண்களை பாதுகாக்கிற ஆட்சியாக விளங்கி வருகிறது - கனிமொழி எம்.பி. பேச்சு

    • பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவிற்கு ஒரு தொழில் வளாச்சி பெறக் கூடிய நிலையை தந்திருக்கக் கூடிய திட்டமாக இன்று பணிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான திட்டமான மக்களைத்தேடி மருத்துவ திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்ப ட்டுள்ள பணிக்கூட த்தினை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    கனிமொழி எம்.பி.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கனிமொழி எம்பி பேசியதாவது:-

    பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவிற்கு ஒரு தொழில் வளாச்சி பெறக் கூடிய நிலையை தந்திருக்கக் கூடிய திட்டமாக இன்று பணிக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. கலைஞர் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி தந்தவர். மகளிர்கள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கடலை மிட்டாய் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு செய்து தரப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பிற்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்ட ங்களை செயல்படுத்தி கொண்டி ருக்கிறார்.

    மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்து கொண்டி ருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான திட்டமான மக்களைத்தேடி மருத்துவ திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களை பாதுகாக்கும் ஆட்சி

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கலைஞர் எப்படி நிறை வேற்றி தந்தாரோ அதே போல் அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு எல்லோருக்குமான ஆட்சியாகவும், முக்கியமாக பெண்களை பாதுகாக்கிற ஆட்சியாகவும் விளங்கி வருகிறது. மேலக்கரந்தை பகுதியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ரூ. 1.90 கோடி மதிப்பில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால்கள் போன்ற மக்களின் அடிப்படை வசதிக்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அரசின் திட்டங்களை பெற்று உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×