search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துபாயில் பதுங்கிய தம்பதி இண்டர்போல் உதவியை நாடிய போலீசார்
    X

    துபாயில் பதுங்கிய தம்பதி இண்டர்போல் உதவியை நாடிய போலீசார்

    • அதிக லாபம் தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி
    • 7 பேர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார். இவர் காளப்பட்டி பகுதியில் அல்பா போரெக்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 8 முதல் 20 சதவீதம்வரை வட்டி தருவ தாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார். ஆன்லைன் மூலம் கோவை, நெல்லை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த ஏராளமான வர்களிட ம்கோடி க்கணக்கில் மோசடி செய்துவிட்டு விமல் குமார் தலைமறைவாகிவிட்டார்.

    பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் மோசடி தொடர்பாக அதன் உரிமையாளர் விமல்குமார், அவருடைய மனைவி ராஜேஸ்வரி, தம்பி சந்தோஷ்குமார், மற்றும் அருண்குமார், கவிதா என்ற கங்காதேவி, யுவன், சுஜித் ஆகிய 7 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதில் முக்கிய ஆசாமியான விமல்குமாரும், அவரு டைய மனைவி ராஜேஸ்வரியும், தம்பி சந்தோஷ்குமாரும் துபாயில் பதுங்கி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் களை கைதுசெய்ய சர்வதேச போலீஸ் (இண்டர்போல்) உதவியை நாட பொருளா தார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில் இந்த வழக் கில் தொடர்புடைய புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது32), கோவை டேன்பிட் கோர்ட் டில் நேற்று சரண் அடைந் தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அருண்குமார் பலரிடம் பணம் வசூலித்து கொடுக்கும் கலெக்சன் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.

    இந்த வழக்கின் முழு தகவல்களை அறிய, அருண்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக விரைவில் கோவை டேன் பிட் கோர்ட்டில் மனுதாக் கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×