search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொலைநோக்கு திட்டத்தோடு முதல்-அமைச்சர் பணியாற்றி வருகிறார் -அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி. அருகில் மேயர் ஜெகன்பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    தொலைநோக்கு திட்டத்தோடு முதல்-அமைச்சர் பணியாற்றி வருகிறார் -அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • தி.மு.க. ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
    • விழாவில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர தி.மு.க.துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் அந்தோணி முத்துராஜா, செயலாளர் முருகன், ஞானக்கண், லெட்சுமி, பொருளாளர் செல்வகுமார், வட்ட பிரதிநிதிகள் மகேஸ்வரன், பாலமுருகன், ஆட்டோ குமார், படையப்பா, கிருஷ்ணன் பிள்ளை, நிர்வாகிகள் முத்துராஜ், முருகேசன், மாரியப்பன், கிருபை மணி, முத்துச்சாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், சேலை, ஆட்டோ ஓட்டுநர்கள் 20 பேருக்கு சீருடை உள்பட 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழக மக்கள் நல்ல உழைப்பாளிகள், கல்விதிறன் உள்ளவர்கள். இந்தியாவில் தொழில்துறையில் 24-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. தொலைநோக்கு திட்டத்தோடு முதல்வர் பணியாற்றி வருகிறார். ஊட்டச்சத்து குறைவை தடுக்கும் வகையில் காலையில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வருகைப் பதிவேடும் கூடியுள்ளது.

    பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 40 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணை யாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் ஜெகன் பெரிய சாமி பேசியதாவது:-

    1¾ வருடம் ஆட்சியில் இந்தியா திரும்பி பார்க்கும் வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது. எல்லா துறைகளிலும் 100 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

    இந்த பகுதி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன், மகளிரணி நிர்வாகள் ரேவதி, சந்தனமாரி, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, இசக்கிராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மகளிரணி துணை அமைப்பாளர் பார்வதி மற்றும் மணி, அல்பர்ட், பிரபாகர், வட்ட செயலாளர்கள் பாலு, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்.இ.டி. டி.வி. வழங்கப்பட்டது.

    Next Story
    ×