search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்- உயிரிழந்தவரின் சகோதரர் கலெக்டரிடம் மனு
    X

    4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி மனு அளிக்க வந்த கோபி.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்- உயிரிழந்தவரின் சகோதரர் கலெக்டரிடம் மனு

    • கடந்த 2017-ம் ஆண்டு இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.
    • சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றிலும் இணை கோவில்கள் உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    தீக்குளித்து பலி

    நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட மாக இருந்தபோது நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசி தர்மம் பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென இசக்கிமுத்து தனது குடும்பத்தினருடன் தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் இசக்கி முத்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர்.

    சகோதரர் மனு

    இது தொடர்பாக அவரது சகோதரர் கோபி அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கோபி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சகோதரர் குடும்பத்தினர் தீக்குளித்து இறந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2022-ம் ஆண்டு சரிவர நடக்காத காரணத்தினால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். அதன்படி 6 வார காலத்திற்குள் வழக்கை முடிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் இதுவரை வழக்கு விசாரணை என்பது மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக போலீ சாரிடம் கேட்ட போது, வழக்கின் 4-வது குற்றவா ளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் வெளிநாடு சென்று விட்டார். அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை என்று கூறி அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதனால் வழக்கை முடிப்ப தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே தலைமறை வாக உள்ள 4-வது குற்ற வாளியை விரைந்து கண்டு பிடித்து இந்த வழக்கை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    சாலை வசதி

    அம்பை அருகே உள்ள சின்ன சங்கரன்கோவில் பாடகலிங்க சுவாமி பக்தர்கள் மற்றும் உழவார பணி குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்பை வட்டம் மலையன்குளம் கிராமத்தில் பாடகலிங்க சுவாமி கோவில் உள்ளது. சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றிலும் இணை கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாதம்தோறும் பல்வேறு பூஜைகள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழா காலங்களில் அம்பை கல்லிடைக்குறிச்சியில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×