search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
    X

    மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

    • தெரு விளக்கு எரியாததால் அதை பழுது நீக்கம் செய்ய கூறியுள்ளனர்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 22). இவர் வேளாங்கண்ணி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் லைன் மேனாக பணியாற்றி வந்தார்.

    சம்பவதன்று பேரூராட்சியில் பணியாற்றி விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் தண்ணிலப்பாடி கிராமத்தில் தெரு விளக்கு எரியாததால் அதை பழுது நீக்கம் செய்ய கூறியுள்ளனர்.

    அதை தொடர்ந்து மின்கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக வெற்றிவேலை மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மின்சாரம் இறந்த வெற்றிவேலுக்கு திருமணமாகி 4 மாத பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×