search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கள்ளக்காதலை தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
    X

    கோவையில் கள்ளக்காதலை தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

    • திருமணமான 15 நாட்களில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தனது ெபற்றோர் வீட்டுக்கு சென்றார்.
    • சிவக்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). கூலிெதாழிலாளி. இவருக்கம் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த பவித்ரா (27) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் திருமணமான 15 நாட்களில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தனது ெபற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் பலமுறை சிவக்குமார், பவித்ராவின் வீட்டுக்கு சென்று அவரை சமாதானம் செய்து தன்னுடன் வந்து வாழுமாறு கூறினார். ஆனால் அவர் சிவக்குமாருடன் செல்ல மறுத்தார். தொடர்ந்து சிவக்குமார், பவித்ராவின் வீட்டுக்கு சென்று அவரை தொந்தரவு செய்து வந்ததால் அவர் மீது பவித்ராவின் குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தெரிவி த்தனர்.

    இதனால் அவர் அங்கு செல்வதை தவிர்த்தார். இந்த நிலையில் சிவக்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த சிவகுமாரின் தந்தை அவரை கண்டித்தார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பெறாமல் வீடு திரும்பினார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×