search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாலிபர் தற்கொலை
    X

    கோவையில் வாலிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூர்யா கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் தூக்கில் தொங்கினார்.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பகத்சிங் நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    எனவே சூர்யா தனது தாயிடம் கடன் கட்டுவதற்கு பணம் வேண்டும் என கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.இதன் காரணமாக சூர்யா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சூர்யா கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக சூர்யாவை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×